மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் : கூட்டமைப்பு உறுதி

Published By: R. Kalaichelvan

29 Jun, 2019 | 02:52 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அதற்காக மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே முற்றாக மரணதண்டனையை இல்லாதொழிக்கும் வகையில் சட்டங்களில் மறுசீரமைப்புக்களை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பாராளுமன்றத்தில் மேற்கொள்வோம் என்று கூட்டமைப்பு உறுதியளித்திருக்கிறது.

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மரணதண்டனைக் கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை விரைவில் நிறைவேற்றவிருப்பதாகவும், அதற்குரிய அனுமதிப்பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும் கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்தமையைத் தொடர்ந்து சர்வதேச நாடுகள், மனித உரிமை அமைப்புக்கள் பலவும் அதற்குக் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் சுமார் 40 வருடங்களுக்கும் அதிகமான காலம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தைக் கண்டித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. 

அதில் மரணதண்டனையை நீக்குவதற்கான சட்ட மறுசீரமைப்புக்களை பாராளுமன்றம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எத்தகைய பாத்திரத்தை வகிக்கும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதில் அக்கறையாக இருக்கின்ற ஜனாதிபதி, 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பில் முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று செல்வம் எம்.பி சுட்டிக்காட்டினார். 

விசாரணைகள் ஏதுமின்றி பல அரசியல்கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சிலருக்கு விசாரணைகள் இடம்பெற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. மேலும் சில கைதிகள் தொடர்பில் விசாரணைகள் பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. இவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அதுகுறித்து அவர் சிந்திக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58