அப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் ஜொனி ஐவ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.
ஜொனி ஐவ் அப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், ஐ-மேக், ஐ-பேட் என அனைத்து விதமான இயக்கிகளையும் வடிவமைத்தவர்.
இவர் 1992ம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டுகளாக அப்பிள் நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர். தற்போது அதன் தலைமை வடிவமைப்பாளராக உள்ள ஜொனி ஐவ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அப்பிள் நிறுவனம், லவ் ப்ரோம் (LoveFrom) என்ற சொந்த நிறுவனத்தை ஜொனி ஐவ் தொடங்கவுள்ளார். இதன் காரணமாகவே அப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜொனி ஐவின் ‘லவ் ப்ரோம்’ நிறுவனத்தின் முதல் வாடிக்கையாளராக அப்பிள் நிறுவனம் இருக்கும் என பெருமையுடன் தெரிவித்துள்ளது. அதேப்போல், ஜொனி ஐவிற்கு பதிலாக எவன்ஸ் ஹான்கி, ஆலன் டே அகியோர் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
அப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக் கூறுகையில், ஜொனி ஐவின் வடிவமைப்பு திறனுக்கு ஈடு இணையே இல்லை என்றும், 1998ம் ஆண்டு அவர் வடிவமைத்த ஐ-மேக் இன்றளவும் பெரிதும் பேசப்பட்டும், விற்பனை செய்யப்பட்டும் வருகிறது மிகப் பெருமைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM