உலககோப்பையில் நாளை இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதிய உடை அணிந்து விளையாட உள்ளது.
நடைப்பெற்று வரும் உலககோப்பையின் 38 ஆவது போட்டி நாளை மாலை 3 மணிக்கு பேர்மிங்காமில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்வுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி தனது புதிய உடையை அறிமுகம் செய்துள்ளதுடன் இதனை அணிந்தே நாளை போட்டியில் களமிறங்கவுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் நீலநிற உடை அணிந்து விளையாடி வந்துள்ளன.
சர்வதேச போட்டிகளில் மோதும் இரு அணிகளும் ஒரே நிறத்தில் உடை அணிந்து விளைாயட கூடாது என ஐ.சி.சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயெ புதிய உடை அணிந்து விளையாட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
தற்போதைய நிலையில் இங்கிலாந்து அனைத்து போட்டியை நடத்தும் நாடு என்பதால் உடையை மாற்ற முடியாது.
எனவே இந்திய அணி தனது ஆடையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதுள்ளதை அடுத்தே இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்தியஅணி புதிய உடையை தேர்வு செய்த நிலையில்அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.இதன்படி வீரருக்கான உடையின் கழுத்து பகுதி நீலநிறமாகவும், சட்டையின் முன்பக்கம் இந்திய அணியின் பெயருடன் நீல நிறமாகவும் காட்சிளிக்கிறது.
மேலும் தோள்பட்டை , கைகளில் காவி நிறமாகவும், பின்புறம் முழுவதும் மஞ்சள் நிறமாகவும் ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடைப்பெற்ற வரும் அனைத்து போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 11 புள்ளி கணக்கில் 2 ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM