(நா.தினுஷா)
பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் காணிகளுக்கு முழுமையான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்ற நிலையில், அவற்றை 99 வருட கால குத்தகைக்கு வழங்க இடமளிக்க முடியாது. குத்தகையின் அடிப்படையில் மக்களுக்கு காணி பத்திரங்களை வழங்க நாங்கள் தயாராகவும் இல்லை. இந்த பத்திரங்களை முழுமையான பத்திரங்களாக பெற்றுக்கொடுக்க இடமளிக்க வேண்டும் என்று மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பெருந்தோட்ட சமூகத்தின் காணி உரிமை தொடர்பிலான இன்று சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் கொழும்பு ரேனுகா ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த கருத்தரங்கில் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பி. முத்துலிங்கம், அமைச்சர் பழனி திகாமபரம், அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் எம். வாமதேவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதோடு பல்வேறு தொழ்ற்சங்கள் சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்களும் தமது கருத்துக்களையும் பெருந்தோட்ட பிரச்சினைகள் தொடர்பான தமது கண்னோட்டங்களையும் பகிர்ந்துக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM