(ஆர்.விதுஷா)
பொலனறுவை- புராதன தொழில்நுட்ப நூதனசாலை எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரியால சிறிசேன தலைமையில் மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் பீ.கே.எஸ்.ரவீந்திர தெரிவித்தார்.
இந்நிகழ்வு காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளதுடன், அன்றைய தினத்தில் இரவு 8 மணிவரை டிஜிட்டல் தொழில் நுட்ப கண்காட்சி உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்கும் , சுற்றுலாப்பயணிகளுக்கும் நாட்டின் விழுமியங்களை தெரியப்படுத்தும் வகையிலும் , தொழில்நுட்பத்தில் நாம் அடைந்திருக்கும் மட்டத்தை பிரதிபளிக்கும் வகையிலுமான புராதன தொழில் நுட்ப நூதன சாலை பொலனறுவையில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நூதனசாலை மக்கள் பார்வைக்காக ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டவுள்ளது. பொலனறுவை காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறைகள் தொடர்பில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலேயே இது நிறுவப்பட்டுள்ளது.
பொலனறுவகால ஆரம்பம் மற்றும் வரலாற்றுக்கால தொழில்நுட்பங்கள், அந்த காலத்திற்குட்பட்ட மட்பாண்ட உலோகத்தொழிநுட்பம் , விவசாய, நீர்ப்பாசன தொழில்நுட்பம், கட்டடக்கலைத்தொழில் நுட்பம், ஓவியம், சிற்பம் மற்றும் கணிதத்தொழில்நுட்ப முறைகள் என்பனவற்றை அங்கு அறிந்த கொள்ளக்கூடியதாகவிருக்கும் 90கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நூதனசாலையின் கட்டுமான பணிகள் 2016ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப் பட்டிருந்தன.
இந்த நூதனசாலை 7 பிரிவுகளைக் கொண்டு அமைந்துள்ளது. இதில் விரிவுரை மண்டபம் , செயற்பாட்டு நிலையம் , நவீனமயப்படுத்தல் நிலையம் , நூலகம் உள்ளிட்ட நவீன வகையான தொழில்நுட்ப பிரிவுகளும் உள்ளடக்கப் பட்டுள்ளன. இதனூடாக சுற்றுலாப்பயணிகளும், பாடசாலை மாணவர்களும் பொலனறுவ காலகட்டத்தில் பயன் படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறைகளை அறிந்து கொள்ள கூடியதாகவிருக்கும்.
நூலகத்தில் சுமார் 30ஆயிரம் புத்தகங்கள் உள்ளதுடன், மேலதிக தகவல்களை அதனூடாக அறிந்துகொள்ள முடியம். மும்மொழிகளிலும், வழிநடத்தல் காணொளிகளினூடான தெளிவு படுத்தல்களும் வழங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM