படுக்கையறையில் கிடந்த வளையலும், இரத்தக்கறையும்: கழிவறை வாளியில் 4 வயதுச் சிறுமியின் சடலத்தை பார்த்து கதறிய குடும்பம்

Published By: J.G.Stephan

28 Jun, 2019 | 04:20 PM
image

இந்தியா, சென்னை அருகே 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கழிவறை வாளியில் அவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொடுமையொன்று இடம்பெற்றுள்ளது. 

சென்னை அருகே உள்ள அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் பொலிஸ் நிலையத்தின் அருகில் அந்தோணி நகர் உள்ளது. இங்கு குடியிருக்கும் ராஜேந்திரனின் 4 வயது மகளைக் காணவில்லை என்று அந்தப்பகுதியினர் ஒவ்வொரு வீடு வீடாகத் தேடியுள்ளனர்.

இந்நிலையில், சிறுமி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, திருமுல்லைவாயல் பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் அம்மா, புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், ராஜேந்திரனின் வீட்டின் அருகே உள்ள வீட்டிலிருந்து பினாயில் வாசனை அதிகளவில் வந்தது. இதனால் அந்த வீட்டுக்குள் பொலிஸார் நுழைந்தனர். 

கழிவறை, படுக்கையறை பினாயில் ஊற்றி கழுவப்பட்டிருந்தது. தொடர்ந்து அந்த வீட்டை அங்குலம் அங்குலமாக பொலிஸார் சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டின் படுக்கையறையில் சிறுமியின் ஒரு கம்மல், உடைந்த வளையல்கள், இரத்தக்கறைகள் இருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர். இதுகுறித்து அந்த வீட்டில் உள்ளவர்களிடம் பொலிஸார் விசாரித்த போது, இது குறித்து தனக்கு எதுவும் தெரியாதென மறுத்துள்ளனர். 

இருப்பினும் பொலிஸார் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது அந்த வீட்டில் குடியிருக்கும் முன்னாள் ராணுவ வீரான சுந்தரத்தின் மீது பொலிஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. 

இதையடுத்து, அவரை போலீஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். இதற்கிடையில், ராஜேந்திரனின் வீட்டுக் கழிவறையில் உள்ள வாளியில் பிளாஸ்டிக் பை ஒன்று இருந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது 4 வயது சிறுமி சடலமாக இருந்தாள். 

அதைப்பார்த்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கதறி அழுதனர். இதையடுத்து, சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு சிறுமியின் சடலம் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. சிறுமியைக் கொலை செய்த குற்றத்துக்காக முன்னாள் இராணுவ வீரர் சுந்தரத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் பொலிஸார் கூறுகையில், “சிறுமியைக் காணவில்லை என்று அவரின் அம்மா எங்களிடம் புகார் கொடுத்தார். 

அப்போது சுந்தரமும் பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்தார். அவரும் எங்களோடு சேர்ந்து சிறுமியைத் தேடினார். அப்போது அவர் மீது எங்களுக்கு சந்தேகம் வரவில்லை.

பொலிஸ் நிலையம் அருகில்தான் அந்தோணி நகர் உள்ளது. இதனால் உடனடியாக அந்தப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளில் சிறுமியைத் தேடினாம். சிறுமியின் வீட்டின் அருகே உள்ள சுந்தரத்தின் வீட்டிலிருந்து பினாயில் வாசனை வந்தது. 

சந்தேகத்தின்பேரில் அங்கு சென்று விசாரித்தபோதுதான் சிறுமியை அவர் கொலை செய்த தகவல் தெரியவந்தது. அந்த வீட்டிலிருந்து சிறுமி அணிந்திருந்த ஒரு கம்மல், உடைந்த வளையல்கள், இரத்தக்கறை படிந்த வேட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இன்னொரு கம்மல் சிறுமியின் காதில் இருந்தது.

சிறுமியின் சடலத்தைப் பார்க்கும்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளன. இருப்பினும் பிரேதப் பரிசோதனையில்தான் அதை உறுதி செய்ய முடியும். 

கைது செய்யப்பட்ட சுந்தரம், சிறுமிக்கு தாத்தா முறை. அவரின் வீட்டுக்கு அடிக்கடி சிறுமி செல்வதுண்டு. சம்பவத்தன்று சிறுமியின் அம்மா, தன்னுடைய மூத்த மகனை மாலை வகுப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 

சிறுமியின் அம்மா வீட்டுக்குத் திரும்பியபிறகு மகளைத் தேடியுள்ளார். 2 மணி நேரத்துக்குள் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். 

சிறுமியின் சடலத்தை கழிவறையில் உள்ள வாளியில் போடப்பட்டது குறித்து விசாரித்தபோது சுந்தரம் எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்தார்” என்றனர்.

மேலும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10