(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )
தென்னிந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமான சுற்றுலா தொடர்புகளே அதிகமான உள்ளது. ஆகவே தென்னிந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை பலப்படுத்தும் வகையிலும் அதேபோல் வடக்கில் மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலுமே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாக சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சிவில் விமான சேவைகள் ஒழுங்கு விதிகள் சட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவிக்கையில்:- பலாலி விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தை தரையிறக்குவதற்கான ஓடு பாதையை அமைக்க வேண்டியுள்ளது. தற்போது 70 பேர் பயணிக்கும் விமானத்தை மாத்திரமே தரையிறக்க முடியுமாக இருகின்றது. இதனால் அதன் ஓடு பாதையை விரிவுப்படுத்த நடவடிக்கையெடுக்க எதிர்பார்க்கின்றோம். இதன்மூலம் தென்னிந்தியாவுடனான எமது தொடர்புகள் மேலும் பலமடையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM