காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது ஆகிய மூன்று பகுதிகளில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும், வைரஸ், பாக்டீரியா பங்கஸ் போன்ற தொற்றுகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் வெங்கட் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சில பிள்ளைகள் நீச்சல் பயிற்சி பெறும் பொழுது அவர்களுடைய காதுகளில் fungus தொற்று ஏற்படலாம் அல்லது அவர்களின் செவிப்பறையில் பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு நடுக்காதில் வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக காதில் சீழ் பிடிக்கும். இதன் காரணமாக காது மற்றும் அதன் அருகிலுள்ள எலும்புகளை அரித்து விடவும் கூடும். இதனை வை்த்திய மொழியில் கொலஸ்ட்ரமோ என்பார்கள்.
இத்தகைய பாதிப்பு வந்தால், பாதிப்பின் தன்மையைப் பரிசோதித்து, அவர்களுக்கு சத்திர சிகிச்சை செய்து அதனை அப்புறப்படுத்துவார்கள். இதற்குரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் காது கேட்கும் திறன் இழப்பதுடன் மூக்கு, முகம், மூளை, தொண்டை, கண் உள்ளிட்ட பாகங்களும் பாதிக்கப்படக்கூடும். 12 வயதுக்கு உட்பட்ட சில பிள்ளைகளுக்கு காதின் பின் பகுதியில் உள்ள அடினாய்ட் பகுதியில் தொற்று ஏற்படும். இதன் காரணமாகவும் அவர்களின் காது மற்றும் கேட்புத்திறன் பாதிக்கக்கூடும்.
விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து மேலெழும்பும் மற்றும் கீழே இறங்கும் ஆகாய விமானங்கள் எழுப்பும் ஒலியின் அளவு 140 டெசிபல்.
அதேபோல் தொழிற்சாலைகளில் சில பொருட்களின் உற்பத்தியின் போது எழும் ஒலியின் அளவு 85 டெசிபல்கள். இத்தகைய தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து 85 டெசிபல் ஒலி அளவை 8 மணி நேரத்திற்கு மேலாக கேட்டால், அவர்கள் தங்களின் கேட்கும் திறன் மற்றும் காதின் அமைப்பு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவது உறுதி.
இவர்கள் மாதம் தோறும் தங்கள் கேட்கும் திறன் குறித்து முறையான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக எம்முடைய காதின் கேட்புத்திறன் 60 டெசிபல் அளவிற்கு உள்ளாகவே இருக்க வேண்டும்.
போல் இத்தகைய ஒலி அளவிற்கும், தூரத்திற்கும் தொடர்பு உண்டு. குறிப்பிட்ட தொலைவிலிருந்து, குறிப்பிட்ட டெசிபல் அளவில் ஒலி கேட்டால் காதில் கேட்புத்திறன் சமநிலையில் இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM