வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை புகையிரத நிலைய வீதியிலுள்ள முதிரைத் தோட்டம் தேடி வந்த பிள்ளையார் ஆலயத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டியும், சுதந்திரமான வாழ்வு பெறவேண்டியும் மகாயாக வேள்விலும் ஆன்மீக பிரார்த்தனையிலும் கலந்துகொண்டனர்.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டு தமது உறவுகளை நினைத்தும் நிரந்தரத்தீர்வு கிடைக்க வலியுறுத்தியும் வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் அருளுரையினை கொழும்பு, ஆன்மீக அருள் ஜோதி சர்வதேச இந்து குரு பீடாதிபதி ஸ்கந்தசாபசிவ சரவணபவ ஜயப்பதாசக் குருக்கள் ஆற்றியதுடன் அந்தணர்களும் சிவாச்சாரியார்களும் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 12.00மணியளவில் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது போராட்ட இடத்திற்கு சென்றடைந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM