பதுளை பகுதியின் நமுனுகல கிராமிய அரச வைத்தியசாலையில் நிரந்தரமாக சேவையாற்றக்கூடிய வைத்தியர் ஒருவரை ஈடுபடுத்தும்படி ஊவா மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஜே. சி. எம். தென்னக்கோன் மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அக்கடிதத்தில் “பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், நமுனுகல கிராமிய அரச வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை நிரந்தர சேவையில் உடன் ஈடுப்படுத்தும்படியும், வைத்தியர் ஒருவர் சேவையில் இல்லாமையினால் பெருந்தோட்ட மக்கள் உள்ளிட்ட கிராமிய மக்கள் பெரும் பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
மேலும் நமுனுகல கிராமிய அரச வைத்தியசாலைக்கு இரு வைத்தியர்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் , சம்பந்தப்பட்டவர்களினால் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து கடந்த மே மாதம் 10ம் திகதி சேவையில் இருந்த வைத்தியர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
இதுவரையில் அவ் நிரந்தர வெற்றிடம் பூர்த்தி செய்யப்படாமையிலேயே இருந்து வருகின்றது.
இதனாலேயே பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மக்கள் படும் அசௌகரியங்கள் குறித்து எனது கவனத்திற்கு அடிக்கடி கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்.
குறிப்பிட்ட கிராமிய வைத்தியசாலையை சூழவுள்ள பிரதேசம் மிக பின்தங்கியுள்ள பிரதேசமாகும். ஆகையினால் இவ் வைத்தியசாலைக்கு உடனடியாக வைத்தியர் ஒருவரையாவது சேவையில் ஈடுபடுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மற்றும் பிரதேச சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM