தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் மீது நம்பிக்ககையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்த போவதில்லை என தி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண தி.மு.க. அரசு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. ஆனால் அ.தி.மு.க. அரசு தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தொடர்ச்சியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சட்டப்பேரவை கூடுவதால் எதிர்க்கட்சிகளை சமாளிக்க இந்த அரசு நெம்மேலியில் இரண்டாவது ஆலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளது. தமிழகமெங்கும் குடிநீர் தட்டுப்பாட்டால் பெண்கள் காலி குடங்களுடன் அலையும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையில் தி.மு.க. தண்ணீர் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும்.
பேரவைத் தலைவர் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்த போவதில்லை. இதை வாய்மொழியாகவும் தெரிவித்து விட்டோம். இது தொடர்பாக அவைத் தலைவருக்கு கடிதமும் கொடுத்திருக்கிறோம். அப்போதைய சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்தோம். ஆனால் தற்போதைய சூழலில் அது தேவையில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM