மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட கபடி வீரரும் முன்னணி கபடி பயிற்றுவிப்பாளருமான துரைசாமி மதன்சிங் இலங்கைக்கான தேசிய கபடி அணியில் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
3 ஆவது ஆசிய கபடி (Circle Kabbadi) போட்டிகளில் பங்குபற்றும் இலங்கைக்கான தேசிய கபடி அணியிலேயே துரைசாமி மதன்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டுக்கான ஆசிய circle கபடி சுற்றுப் போட்டியானது இம்மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த சுற்றுப்போட்டியில் பங்குகொள்ளும் இலங்கை அணி அண்மையில் பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.
அந்தவகையில் இவ்வணியில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு தமிழ் வீரர் இவர் என்பது விசேட அம்சமாகும்.
இதேவேளை, மதன்சிங், முதலாவது ஆசிய circle கபடி போட்டியில் இலங்கை சார்பாக பங்குகொண்டதுடன் அப்போட்டித்தொடரில் இலங்கை அணி 3 ஆம் இடத்தை சுவீகரித்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழகத்தின் மல்யுத்த வீரரான இவர் மல்யுத்த போட்டிகளிலும் தேசிய அளவில் பதக்கங்களை சுவீகரித்து மட்டக்களப்பு மண்ணிற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் தமிழ் பேசும் மக்களிற்கும் பெருமை தேடித்தந்தவருமாவார்.
தனது வாழ்நாளின் பெரும் பகுதியை விளையாட்டிற்காக அர்ப்பணித்துள்ள இவர் இப்போட்டிகளில் பிரகாசித்து அணிக்கும், நாட்டிற்கும், மண்ணிற்கும் பெருமை சேர்ப்பார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM