(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவிக்கும் நிலையில் நாட்டில் குழப்ப நிலையை தற்போது யார் ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக ஏன் அவசரகாலசட்டத்தை செயற்படுத்த முடியாமல் இருக்கின்றது என முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடித்துக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கடைகள் வீடுகளை உடைத்தும் உண்ணாவிரதம் இருப்பவர்களே நாட்டில் பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர். சிங்கள, முஸ்லிம் மக்களிடத்தில் இனவாதத்தை தூண்டி பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இவற்றை பயங்கரவாதிகள் செய்வதில்லை. இவர்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டம் செயற்படுவதில்லை. இதுதான் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றே அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுகின்றது. அப்படியாயின் வீடுகளை, கடைகளை, பள்ளிவாசல்களை உடைப்பது, சில ஊடகங்களில் இனவாதத்தை தூண்டும்வகையில் அறிக்கையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா? இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இன்று சுதந்திரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM