"குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக ஏன் அவசரகால சட்டத்தை செயற்படுத்த முடியவில்லை?"

Published By: Vishnu

27 Jun, 2019 | 05:19 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவிக்கும் நிலையில் நாட்டில் குழப்ப நிலையை தற்போது யார் ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக ஏன் அவசரகாலசட்டத்தை செயற்படுத்த முடியாமல் இருக்கின்றது என முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடித்துக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கடைகள் வீடுகளை உடைத்தும் உண்ணாவிரதம் இருப்பவர்களே நாட்டில் பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர். சிங்கள, முஸ்லிம் மக்களிடத்தில் இனவாதத்தை தூண்டி பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இவற்றை பயங்கரவாதிகள் செய்வதில்லை. இவர்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டம் செயற்படுவதில்லை. இதுதான் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை. 

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றே அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுகின்றது. அப்படியாயின் வீடுகளை, கடைகளை, பள்ளிவாசல்களை உடைப்பது, சில ஊடகங்களில் இனவாதத்தை தூண்டும்வகையில் அறிக்கையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா? இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இன்று சுதந்திரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08