மரணதண்டனையை நிறைவேற்றுவதில்லை என்ற தனது நீண்ட கால கொள்கையை இலங்கை கைவிட தீர்மானித்துள்ளது என்ற தகவல் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக இலங்கைக்கான கனடா தூதரகம் தெரிவித்துள்ளது.
அனைத்து வழக்குகளிலும் மரணதண்டனையை கனடா கடுமையாகவும் எந்தவித தயக்கமும் இன்றி எதிர்க்கின்றது என தூதரகம் தெரிவித்துள்ளது.
மரணதண்டனை என்பது மனித கௌரவத்திற்கு முரணானது என தெரிவித்துள்ள கனடா நீதி தொடர்பில் மீள முடியாத தவறுகளிற்கு மரணதண்டனை வழிவகுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எந்த நீதி அமைப்பும் தவறிழைக்காது என தெரிவிக்க முடியாது எனவும் கனடா குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் அவசியமானவை என தெரிவித்துள்ள கனடா ஆனால் மரணதண்டனை சட்டவிரோத போதைப்பொருள் வர்த்கத்தை கட்டுப்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கை மீண்டும் மரணதண்டனையை ஆரம்பிப்பது சர்வதேச கவனத்தை இலங்கையை நோக்கி திருப்பலாம் என தெரிவித்துள்ள கனடா இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் இலங்கையின் கௌரவத்தை உயர்த்துவதற்கு உதவாது எனவும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM