ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலையுடன் தொடர்புடைய சாட்சியங்களை திட்டமிட்டு மறைத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவை 20 இலட்சம் ரூபா என்ற இரண்டு சரீரப்பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ள 10 இலட்சம் ரூபாவான ரொக்கப் பிணையை மேல் நீதிமன்றத்தின் பிணையாக ஏற்பதற்கும், பிரதிவாதியின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவின் விரல் அடையாளங்களைப் பெற்றுக் கொள்ளவதோடு, அது தொடர்பிலான அறிக்கை சமர்பிப்பதற்கும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா உள்ளிட்ட 06 சாட்சியாளர்களுக்கு அறிவித்தல் அனுப்புவதற்கும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM