மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி ; ஒருவர் படுகாயம்

Published By: Digital Desk 4

27 Jun, 2019 | 12:41 PM
image

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் மோட்டார் சைக்கிள் சென்று மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை 26 பிற்பகல்  இடம்பெற்ற இச்சம்பவத்தில்  சந்திவெளி பிரதான வீதியை அண்டி வசிக்கும் மனோகரன் சுதன் (வயது 18) என்பவரே பலியானவராகும்.

மேலும், சந்திவெளி – ஜின்னா வீதியை அண்டி வசிக்கும் பாஸ்கரன் விக்ஸனன் (வயது 17) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16