மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் மோட்டார் சைக்கிள் சென்று மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை 26 பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சந்திவெளி பிரதான வீதியை அண்டி வசிக்கும் மனோகரன் சுதன் (வயது 18) என்பவரே பலியானவராகும்.
மேலும், சந்திவெளி – ஜின்னா வீதியை அண்டி வசிக்கும் பாஸ்கரன் விக்ஸனன் (வயது 17) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM