இலங்கை அணி வெற்றிபெற்ற இன்ப அதிர்ச்சியில் மயங்கிய இளைஞன்: பரிதாபமாக பலியான சோகம்

Published By: J.G.Stephan

27 Jun, 2019 | 12:07 PM
image

இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த காலங்களில், தொடர் தோல்விகளுக்கு முகங்கொடுத்து வந்தது நாமறிந்ததே. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியின் திடீர் வெற்றியால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி திரில் வெற்றியை பதிவு செய்தது. இலங்கை அணியின் வெற்றியினால் ஏற்பட்ட மகிழ்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் அம்பாறை, தமன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 26 வயதான ரத்நாயக்க முதியன்செலாகே கயான் மதுஷங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இங்கிலாந்து – இலங்கை அணிக்கான போட்டி இடம்பெறுவதற்கு முன்னர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய இளைஞன், மகிழ்ச்சியுடன் வீடு சென்றுள்ளார்.

பின்னர் தொலைகாட்சியில் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளார்.

போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றவுடன், குறித்த இளைஞன் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியல் அவர் உயிரிழந்துள்ளார்.

கிரிக்கெட்டை உயிர் போன்று நேசித்த இளைஞக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியின் வெற்றியால் ஏற்பட்ட அதீத சந்தோசமாக உயிரிழப்புக்கு காரணம் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15