34 கோடிக்கு ஏலம் போன சீன அரச கிண்ணம்

Published By: Daya

27 Jun, 2019 | 09:56 AM
image

சுவிட்ஸர்லாந்தில் ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய கிண்ணம் ஒன்றை 34 கோடியே 12 இலட்சத்து 46 ஆயிரத்திற்கு ஏலத்திற்கு விடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. 

சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெண்கல கிண்ணத்தை வாங்கி வந்தனர். அதன் பின்னரே அது 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த கிண்ணம் என்பது அவர்களுக்கு தெரியவந்தது.

 எனவே அதனை நல்ல விலைக்கு விற்க முடிவு செய்தனர். இதற்காக ஏலம் விடும் நிறுவனங்களை அவர்கள் அணுகியபோது, எந்த ஏல நிறுவனமும் அதனை விற்க முன்வரவில்லை. இதனால் அந்த கிண்ணத்தை விற்கும் முயற்சியை கைவிட்ட அவர்கள், அதனை வீட்டில் டென்னிஸ் பந்துகளை போட்டு வைக்க பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் அந்த தம்பதியின் வீட்டுக்கு சென்ற பிரபல ஓவியர் ஒருவர், அந்த வெண்கல கிண்ணத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அந்த கிண்ணம் 300 ஆண்டுகளுக்கு முன் சீன அரசர் ஒருவருக்காக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். 

இதுபற்றி கேள்விப்பட்ட ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் அந்த தம்பதியிடமிருந்து வெண்கல கிண்ணத்தை வாங்கி  அதனை உடனடியாக ஹாங்காங் எடுத்துச்சென்று அங்கு ஏலம்விட்டது. இதில் அந்த கிண்ணம் 4.8 மில்லியன் சுவிஸ் பிராங்க் ஏலம் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right