(எம்.எப்.எம்.பஸீர்)
மட்டக்குளி, சமிட்புர பகுதியில் சூட்டி உக்குவா என அறியப்பட்ட பாதாள உலகத்துடன் தொடர்புடைய இளைஞர் உட்பட ஐவரை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த குடு ரொஷான் என அறியபப்டும் பிதிவாதி உள்ளிட்ட 9 பேரையும் குற்றச்சாட்டுக்களில் இருந்து முற்றாக விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குறித்த 9 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இவர்களை விடுதலை செய்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் மட்டக்குளி, சமிட்புர பகுதியில் ஐவரை சுட்டுக் கொலை செய்ததாகவும் மேலும் இருவருக்கு கடுங் காயம் ஏற்படுத்தியதாகவும் சட்ட மா அதிபரால் இந்த ஒன்பது பேருக்கும் எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நீண்ட விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே, சாட்சிகளின் பலவீனம் மற்றும் பரஸ்பரத் தன்மையை மையப்படுத்தி பிரதிவாதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM