(ஆர்.யசி)
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் விசாரணைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரையில் தெரிவுக்குழு ஒத்திவைத்துள்ளது.
இராணுவத்தளபதி, வணிக அலுவல்கள் அமைச்சின் செயலாளர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் செயலாளர் ஆகியோர் இன்று தெரிவுக்குழுவினால் விசாரிக்கப்பட்டிருந்தனர். அதனை அடுத்து நான்காவது சாட்சியமாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தெரிவுக்குழு அழைத்தது.
அதற்கமைய குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆசனத்தில் அமர்ந்த பின்னர், தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவுக்குழு உறுப்பினர்களுடன் சற்று நேரம் கலந்தாலோசித்த பின்னர் இன்றைய விசாரணைகளை நடத்த எமக்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தெரிவுக்குழுவில் உள்ள நபர்கள் முக்கியமான கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. விசாரணைக்கு நீண்ட நேரம் தேவைபடுகின்றது.
ஆகவே உங்களால் மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைகளுக்கு வர முடியுமா என கேட்டார், அதற்கு இணக்கம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் உடனேயே வெளியேறினார். ஆகவே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான விசாரணைகள் மீண்டும் வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM