(இராஜதுரை ஹஷான்)
போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்களை தடுக்கும் வகையில் ஈஸ்டர் தின தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த தாக்குதலின் பின்னர் பொது மக்களின் மத்தியில் மிகவும் மோசமான முறையில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கொலன்னாவ பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போதைப்பொருள் ஒழிப்பிற்கு கடந்த காலங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. முக்கிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் குறுகிய காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் . இவ்விடயத்தில் அனைவரது ஒத்துழைப்பும் முழுமையாக கிடைக்கப் பெற்றன.
வெற்றிகரமாக முன்னெடுத்து சென்ற திட்டங்கள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 21ம் திகதி குண்டு தாக்குதலுக்கு பின்னர் இடை நிறுத்தப்பட்டது.
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தொடர்பு காணப்படுகின்றது. எமது இலக்கிற்கு தடைகளை ஏற்படுத்தும் முகமாகவே குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்ற சந்தேகம் காணப்படுகின்றது.
ஏனெனில் போதைப்பொருள் கட்டததல்காரர்களுக்கு அரசாங்கத்தை அமைக்கவும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியுமாயின் போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிரான முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளையும் இல்லாதொழிக்க முடியும்.
போதைப்பொருள் பாவனையினை முற்றாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் மரண தண்டனையே தீர்வாக அமையும் என்று கருதப்பட்டு மரண தண்டனையினை நிச்சயம் அமுல்படுத்துவேன் என்று வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மரண தண்டனையினை நிறைவேற்ற கைச்சாத்திட்டுள்ளேன்.
இன்னும் இரண்டு வார காலத்திற்குள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 27000 ஆயிரம் பேருக்கு மரண தண்டனையினை நிறைவேற்றினார். ஆனால் இவ்வாறு நாம் செயற்பட முடியாது. அனைத்து விடயங்களும் சட்ட வழிமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
மரண தண்டனையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM