வவுனியாவில் கமக்கார பெண்கள் அமைப்புத் தலைவியான இரண்டு பிள்ளைகளின் தாயாரான புனிதலோஜினி மீது அரசியல் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் அவர் தலையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஆசிகுளம் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பொது அமைப்புக்களின் கலந்துரையாடலின்போது மதுபோதையில் அங்கு சென்ற அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சனசமூக நிலைய செயலாளரும் கமக்கார பெண்கள் அமைப்புத் தலைவியுமான இரண்டு பிள்ளைகளின் தாயாரான புனிதலோஜினி மீது தாக்குதல் நடத்தியதில் அவர் தலையில் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் அவரைக்காப்பாற்றச் சென்ற ஆண் ஒருவரும் தாக்குதலில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வவுனியா ஆசிகுளம் பகுதியில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் பொது நோக்கு மண்டபத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவரை அவதூறாக பேசிய நபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அங்கு பல்வேறு பொது அமைப்புக்கள் கலந்துகொண்டனர்.
அப்போது அந்நபருக்கு நெருங்கியவர் மதுபோதையில் அங்கு சென்ற கட்சியின் ஆதரவாளரும் காத்தான்குடியில் பெண்ணைத் திருமணம் செய்த ரஞ்சித்குமார் என்பவரே தாக்குதல் நடத்தியதுடன் அங்குள்ள பெண்களை தகாத வார்த்தைப்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது மாதர் சங்கம் மற்றும் சமுர்த்திச்சங்க உறுப்பினர்களான பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தொலைபேசியில் பொலிசாருடன் தொடர்புகொண்டுள்ளதுடன் அதன் பின்னர் மக்களிடம் எனக்கு இருக்கும் பணத்திற்கும் எனக்கு இருக்கும் பொலிஸ், அரசியல் செல்வாக்கிற்கும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் உங்கள் அனைவரையும் வீடு புகுந்து வெட்டுவேன் என்று எச்சரித்துவிட்டு சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்திற்கே சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் பொலிசார் அவரை அவரது வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இன்று காலை குறித்த நபர் தன்னையும் தாக்கியதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயமடைந்த பெண் விபத்துப்பிரிவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது குறித்த விசாரணைகளை பொலிசார் பக்கச்சார்பின்றி நடத்தி வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM