ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.
அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தான் அணி இதுவரை 6 போட்டிகளை சந்தித்துள்ளது. அதில் 2 வெற்றியும், 3 தோல்வியையும், சந்தித்து ஒரு போட்டி முடிவில்லாமலும் 5 புள்ளிகளை பெற்று பட்டியில் 7 ஆவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் கூட அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற நேரிடும்.
நியூஸிலாந்து அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 6 போட்டியில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்து 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட நியூஸிலாந்து அணி அரையிறுதியில் நுழைவது உறுதியாகிவிடும்.
சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 8 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் பாகிஸ்தான் அணி 6 தடவையும், நியூஸிலாந்து அணி 2 தடவையும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM