வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பட்டதாரிகள் சங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பான மகஜர் ஒன்று நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் ஊடகப்பிரிவில் வைத்து வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ம.ஆனந்தராஜாவினால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பட்டதாரிகள் சங்கத்தின் வேண்டுகோளினையடுத்து நேற்று கொழும்பில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் வன்னி மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வேலைத்திட்டங்கள் எவையும் இந்த ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை எனவே மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களிலுள்ள மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இப்பகுதிகளுக்கு விரைவில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இப்பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திகள், வேலைத்திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதாக பட்டதாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM