அடிப்படைவாதப் பிரச்சினையை முழுமையாக இல்லாதொழிப்போம்  - ஞானசார தேரர் 

Published By: Daya

25 Jun, 2019 | 04:47 PM
image

(நா.தனுஜா)

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு முழுமையாகத் தீர்வு காண்பதற்குரிய ஒரு முறையான திட்டமிடலோ அல்லது இணக்கப்பாடோ இன்னமும் எட்டப்படவில்லை. எனவே இவை தொடர்பில் பகிரங்கமாகக் கலந்துரையாடுவதற்கும், யோசனைகளை முன்வைப்பதற்கும் அனைவரையும் கண்டிக்கு வருமாறு அழைக்கின்றோம் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

நாட்டில் தோன்றியுள்ள அடிப்படைவாதப் பிரச்சினையை முழுமையாக இல்லாதொழிப்பது குறித்து ஆராய்தல், யோசனைகளை முன்வைத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு பௌத்த தேரர்கள், பொதுமக்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கண்டியில் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு பொதுபலசேனா அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் நேற்று செவ்வாய்கிழமை கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாட்டில் தற்போது அனைத்துத் துறைகளுமே மிக மோசமான நிலையை அடைந்திருக்கின்றன. மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்கள். ஆனால் எந்தவொரு பிரச்சினைக்கும் முறையான நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை. மேலும் தற்போது முஸ்லிம் அடிப்படைவாதப் பிரச்சினை முக்கியமானதாக மாறியிருக்கிறது. அதனை முழுமையாகக் களைவதற்கு பாரம்பரிய முஸ்லிம்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனைவருமே நல்ல மனிதர்கள். அவர்களிடம் நல்ல குணாதிசயங்கள் பல உள்ளன. ஆனாலும் இன்று முழு நாடும் நாசமடைந்து போய்விட்டதே. அரசியல்வாதிகள் தமது சொத்துக்கள், பாதுகாப்பு, தமது பிள்ளைகளின் எதிர்காலம் என்பன தொடர்பில் வெகு அக்கறையுடன் இருக்கிறார்கள்.

ஆனால் மக்களின் நல்வாழ்க்கை குறித்து அவர்கள் கருத்திற்கொள்ளவில்லை. இத்தகைய பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு முழுமையாகத் தீர்வு காண்பதற்குரிய ஒரு முறையான திட்டமிடலோ அல்லது இணக்கப்பாடோ இன்னமும் எட்டப்படவில்லை. எனவே இவை தொடர்பில் பகிரங்கமாகக் கலந்துரையாடுவதற்கும், யோசனைகளை முன்வைப்பதற்கும் அனைவரையும் கண்டிக்கு வருமாறு அழைக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47