தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி கப்பம் கோரிய இருவர் கைது

Published By: R. Kalaichelvan

25 Jun, 2019 | 04:25 PM
image

(செ.தேன்மொழி)

தொலைப்பேசி அழைப்புகளினூடாக தொடர்பு கொண்டு பொது மக்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றதாக குறிப்பிடப்படும் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹங்வெல்ல மற்றும் நவகமுவ பகுதிகளில் இவ்வாறு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தி கப்பம் கேட்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மிரிஹான விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதுன. அதற்கமைய இன்று  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 31,44 ஆகிய வயதுகளையுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன். இதன்போது மோசடியில் ஈடுப்பட்டதாக குறிப்பிடப்படும் சந்தேக நபர் மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சந்தேக நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொலைப்பேசி அழைப்புகளினூடாக சில நபர்களை தொடர்பு கொண்டு அவர்களை அச்சுறுத்தி கப்பம் கோரியுள்ளதுடன், கப்ப பணத்தை வங்கி கணக்கின் மூலமும் , 'ஈசி கேஸ் "முறையிலும் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08