(இராஜதுரை ஹஷான்)
முறையான ஒரு நாட்டை கட்டியெழுப்பவேண்டுமாயின் முழு அரசியலமைப்பும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவினையும் வழங்குவோம். நாட்டின் அதிகார பங்கீட்டையும், அதன் தொழிற்பாட்டையும் நிர்ணயிக்க கூடிய கொள்கைகள் அடங்கிய அடிப்படை சட்டமாக காணப்பட வேண்டிய அரசியலமைப்பு இன்று பல குறைப்பாடுகளைக் கொண்டு சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே முறையான ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் முழு அரசியலமைப்பும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் கடந்த நான்கு வருடகாலமாக பயனடைந்துள்ளது என நாட்டு தலைவர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள கூடியது. அரசாங்கத்தின் ஸ்தீரனமற்ற தன்மைக்கு அரசியலமைப்பின் 18ஆவது, 19ஆவது திருத்தங்கள் வழிகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை கவனிக்கவேண்டும்.
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்திய காலக்கட்டத்தில் அரசியலமைப்பினை மையப்படுத்தி எவ்வித அரசியல் நெருக்கடிகளும் ஏற்படவில்லை. அரச அதிகாரம் தொடர்பிலும் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை. மாறாக மக்கள் ஆணைக்கே மதிப்பளிக்கப்பட்டது.
குறுகிய சில விடயங்களை மையப்படுத்தி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இத்திருத்தம் நடைமுறைப்படுத்திய காலத்தில் இருந்தே அரசியல் அதிகாரத்தில் போட்டித்தன்மை காணப்பட்டதுடன், பதவி நிலைகளின் அதிகாரங்கள் தொடர்பிலும் பல சவால்கள் எழுந்தன. இத்திருத்தத்தின் குறைப்பாடுகளை புதிதாக ஒன்றும் குறிப்பிடுவது அவசியம் கிடையாது.
மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவினையும் வழங்குவோம். நாட்டின் அதிகார பங்கீட்டையும், அதன் தொழிற்பாட்டையும் நிர்ணயிக்க கூடிய கொள்கைகள் அடங்கிய அடிப்படை சட்டமாக காணப்பட வேண்டிய அரசியலமைப்பு இன்று பல குறைப்பாடுகளைக் கொண்டு சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே முறையான ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் முழு அரசியலமைப்பும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM