அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளை வாடகைக்கு விடப்படுகிறது?; தோட்ட மக்கள் விசனம்

Published By: Digital Desk 4

26 Jun, 2019 | 02:13 PM
image

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் அரசாங்கத்தினால் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகளைச் சிலர் முறையற்ற விதத்தில் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் கடந்த 1.09.2016 அன்று வீட்டுத் தொகுதி ஒன்று மின்னொழுக்கு காரணமாகத் தீக்கிரையானது. இந்நிலையில் குறித்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் தற்காலிக கூடாரங்கள்  அமைத்துக் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் குறித்த 16 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அரங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் அந்த 16 குடும்பங்களுக்கும் புதிதாக வீடுகள் அமைத்துத் தரப்பட்டன.

இதையடுத்து குறித்த 16 குடும்பங்களில் சில குடும்பங்கள் மாத்திரமே குறித்த புதிய வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் மேலும் சிலர் குறித்த தற்காலிக கூடாரங்களிலேயே தங்கியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த தற்காலிக கூடாரங்களில் தங்கியிருப்பவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய வீடுகளைச் சிலருக்கு வாடகைக்கு விடுவதாகவும் சிலர் குறித்த வீடுகளை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீடுகள் எரிந்து அவதியுற்ற மக்களுக்கு அரசாங்கத்தினால் உதவிகள் வழங்கப்பட்ட நிலையில் அதனைச்  சிலர் முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதனால் அரசாங்கத்தில் எமக்குக் கிடைக்கும் சலுகைகள் இல்லாது போகும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த குடியிருப்புக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04