தலவாக்கலை சென். கிளையார் தோட் டம் ஸ்டேர்லின் டிவிசனில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய மாகாண சபை முன்னாள் உறுபினர்கள் எம். உதயகுமார், சோ.ஸ்ரீதரன், எம்.ராம், “ட்ரஸ்ட்” நிறுவனத் தலைவர் வீ.புத்திரசிகாமணி சகிதம் சென்று பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் வீ.சிவானந்தன் செய்திருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுடனும் தோட்ட முகாமையாளருடனும் கலந்துரையாடிய அமைச்சர் தீவிபத்துக்கு உள்ளான ஆறு குடும்பங்களுக்கும் புதிய வீடுகளை அமைத் துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அத்தோடு, தற்காலிகக் குடில்க ளில் தங்கியுள்ள மேலும் 19 குடும்பங்களுக் கும் சேர்த்து மொத்தமாக 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதால் அதற்கான காணியை தோட்ட நிர்வாகம் வழங்கி உதவினால் உட னடியாக வீடமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஸ்டேர்லின் டிவிசனில் தீவிபத் தில் பாதிக்கப்பட்டுள்ள 6 குடும்பங்களுக் கும் தற்காலிகக் கூடாரங்களை அமைத்துக் கொள்வதற்காக ஒரு தொகுதி கூரைத் தகடு களையும் அமைச்சர் கையளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM