(நா.தனுஜா)
நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ இனத்தவரின் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே மக்களின் பாதுகாப்பு உறுதியானதாக இருக்கும். இனங்களுக்கு இடையிலான தேசிய ஒற்றுமையே மக்கள் பாதுகாப்புக்கான அடிப்படையாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார்.
மதம் சார்ந்த தீவிரவாத வெறித்தனத்தையும் இனவாதத்தையும் தோற்கடித்து தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பையும் தேசிய ஒற்றுமையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் நேற்று திங்கட்கிழமை மருதானையிலுள்ள சமூக, சமய நடுநிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவினால் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
அந்நிகழ்வில் உரையாற்றிய போதே ரில்வின் சில்வா இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்:
உயிர்த்த ஞாயிறு தினம் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களின் பின்னர் நாட்டில் அதுவரை காலமும் பேசுபொருளாக காணப்பட்ட விடயங்கள் பின்தள்ளப்பட்டு, அனைவருக்குமான பொதுச்சட்டங்களின் தேவை உள்ளிட்ட வேறுபல விடயங்கள் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு, பட்டம் பெற்ற இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினை உள்ளடங்கலாக பொதுமக்கள் தமது உரிமைகளைக் கோரி நடத்திய போராட்டங்கள் தாக்குதலின் பின்னர் வலுவிழந்தன.
குண்டுத்தாக்குதல்களால் மக்கள் பெருமளவில் அச்சமடைந்தனர். அதனைப் பயன்படுத்தி சமூகங்களுக்கிடையில் இனவாதத்தைத் தூண்டி, தமது தனிப்பட்ட அரசியல் நலன்களை அடைந்துகொள்ளும் நோக்கில் பல அரசியல்வாதிகள் செயற்பட்டனர். இனவாதம் தானாகவே ஏற்பட்டது என்பதை விடவும், அதனை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது என்றே கூறவேண்டும்.
நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பில் இடம்பெற்றுவந்த விவாதங்கள் திசைமாறி, நாட்டைப் பாதுகாப்பது குறித்து இடம்பெற ஆரம்பித்தது. உண்மையில் இது தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை அல்ல, மாறாக மக்களின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினையே ஆகும்.
எமது நாட்டைப் பிறிதொரு நாடு ஆக்கிரமிப்பதற்கோ அல்லது நாட்டைப் பிரிப்பதற்கோ முற்படும் சந்தர்ப்பங்களே தேசிய பாதுகாப்பு மீதான சிக்கல்களை எழுப்பும். இந்நிலையில் சில அரசியல்வாதிகள் ஒருபுறம் இனவாதத்தைத் தூண்டியவாறு, மறுபுறம் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் தமக்கு மாத்திரமே அக்கறை இருக்கின்றது என்று கூறிக்கொள்கிறார்கள்.
நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ இனத்தவரின் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே மக்களின் பாதுகாப்பு உறுதி யானதாக இருக்கும். இனங்களுக்கு இடையிலான தேசிய ஒற்றுமையே மக்கள் பாதுகாப்பிற்கான அடிப் படையாகும் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM