ஈராக்கிலும் சிரியாவிலும் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஐஎஸ் உறுப்பினர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் விசாரணைககுட்படுத்தவேண்டும் அல்லது விடுதலை செய்யவேண்டும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்செலட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக நாடுகள் தங்கள் நாடுகளை சேர்ந்த ஐஎஸ் உறுப்பினர்களை பொறுப்பேற்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐஎஸ் உறுப்பினர்களின் குழந்தைகள் மிகமோசமான மனித உரிமை மீறல்களிற்கு உட்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நியாயமான விசாரணைகள் மூலமான பொறுப்புக்கூறல்கள் எதிர்காலத்தில் சமூகங்கள் தீவிரவாதமயப்படுத்தப்படுவதை தடுக்கும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குற்றங்களில் ஈடுபடாதவர்கள் என சந்தேகிக்கப்படாதவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்காத பட்சத்தில் ஐஎஸ்உறுப்பினர்களின் வெளிநாட்டு குடும்பத்தவர்களை அவர்களது நாடுகளிற்கே திருப்பி அனுப்பவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோதல் நடைபெறும் பகுதிகளில் தங்கள் நாட்டை சேர்ந்தவர்களிற்கு பிறந்த குழந்தைகளிற்கு உலக நாடுகள் தங்கள் நாட்டின் பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே பெரும் துன்பங்களை அனுபவித்துள்ள குழந்தைகளை நாடற்றவர்களாக்குவது ஈவிரக்கமற்ற செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM