சீனர்களால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1999ஆம் ஆண்டு முதல், செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும், சோதனை ரீதியாக மேம்படுத்திய 'மீள்கடத்தி டோக்காமாக்' என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
அணுக்கரு இணைவு மூலம் சூரிய சக்தி உருவாவதுபோல, இந்த இயந்திரத்தில் செயற்கையாக சூரியசக்தியை உருவாக்க முடியும்.
இதற்கான மீள்கடத்திப் பொருட்களை அமெரிக்கா சீனாவிற்கு வழங்குவதாகக் கூறியிருந்தும் பின்னர் பின்வாங்கியது. இதனையடுத்து சீன விஞ்ஞானிகளே சில ஆண்டுகால முயற்சிக்குப் பின்னர், தரம் வாய்ந்த மீள்கடத்திப் பொருட்களை உருவாக்கியுள்ளனர். அவை தற்போது அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த இயந்திரமானது 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையாகத் தயாராகிவிடும் என்றும், 2050ஆம் ஆண்டு முதல் தொழில்முறையில் இதன் மூலமான சக்தி பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM