தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டத்தினால் வெற்றிபெற்று இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்தது.
309 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 49 ஓட்டத்தனால் தோல்வியைத் தழுவியது.
அணி ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஓட்டங்களை மாத்திரம் பெற்று, ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
தென்னாபிரிக்க அணி சார்பில் அசிம் அம்லா 2 (3) ஓட்டத்துடனும், டீகொக் 47 (60) ஓட்டத்துடனும், டூப்பிளஸ்ஸி 63 (79) ஓட்டத்துடனும், மக்ரம் 7 (16) ஓட்டத்துடனும், வேன் டெர் டஸ்ஸன் 36 (74) ஓட்டத்துடனும், டேவிட் மில்லர் 31 (37) ஓட்டத்துடனும், கிறிஸ் மோரிஸ் 16 (10) ஓட்டத்துடனும், ரபடா 3 (7) ஓட்டத்துடனும், லுங்கி நிகிடி 1 (6) ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் பெஹ்லுக்வேயோ 46 (32) ஓட்டத்துடனும், இம்ரான் தாகீர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷெடப் கான் மற்றும் வஹாப் ரியாஸ் தலா 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் அமீர் 2 விக்கெட்டையும், ஷாஹீன் அஃப்ரிடி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
photo credit : icc
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM