திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி புடவைக்கட்டு பகுதியில் இன்று (23) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் குச்சவெளி செந்தூர்-மதுரங்குடா பகுதியைச் சேர்ந்த கே சுகந்தன் (18 வயது) மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த ஆர். நிரோசன் (28 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி - மதுரங்குடா பகுதியில் இருந்து இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் இன்று மாலை புடவைகட்டு பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்களும் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM