ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.
அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோரட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
தென்னாபிரிக்க அணி இதுவரை 6 போட்டிகளை எதிர்கொண்டுள்ளது, அதில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளதுடன், நான்கு போட்டியில் தோல்விடையந்துள்ளது. அதே நேரம் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டும் உள்ளது.
பெரும்பாலும் அரையிறுதிக்கான வாய்ப்பினை இழந்துள்ள தென்னாபிரிக்க அணி ஏனைய மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று ரன்ரேட்டில் உயர்வும், ஏனைய அனைத்து போட்டிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் ஒருவேளை அதிர்ஷ்டம் கைகூடலாம்.
பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியும், 3 தோல்வியைும் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது. பட்டியில் 3 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் உள்ளது பாகிஸ்தான்.
கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ள இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கடப்பாட்டில் உள்ளது.
சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் தென்னாபிரிக்க அணி 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM