டில்லியிலுள்ள பா.ஜ.க தலைமை காரியாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவலினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் தலைமை காரியாலயத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இன்று சனிக்கிழமை காலை, தொலைபேசி ஊடாக தொடர்பினை ஏற்படுத்தியிருந்த மர்மநபர், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்
அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு, தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அலுவலகம் முழுவதையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
ஆனால், சோதனையின்போது எந்ததொரு சந்தேகத்துக்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என்பதுடன் வதந்தி என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்த செயற்பாட்டினால் அப்பகுதியில் சில மணித்தியாலம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு, தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியிருந்த மர்மநபர் குறித்த விசாரணையை டில்லி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM