(எம்.எப்.எம்.பஸீர்)
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பில் மேல் நீதிமன்ற விஷேட விசாரணைகளை ஆரம்பிக்க மூவர் கொண்ட சிறப்பு குழாமை நியமிக்குமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தின் 450 (4) ஆம் உருப்புரை மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தின் 12(2) ஆம் அத்தியாயத்துக்கு அமைய இந்த கோரிக்கையை சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் முன்வைத்துள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மோசஸ் நியோமால் ரங்கஜீவ, மெகசின் சிறைச்சாலையின் அப்போதைய சிறை அத்தியட்சர் லமாஹேவகே எமில் ரஞ்சன், தற்போது தலைமறைவாகியுள்ள சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின் மிதுவகே இந்திக சம்பத் ஆகியோருக்கு எதிராகவே விசாரணைகளுக்கு மூவர் கொண்ட சிறப்பு நீதிமன்றை அமைக்குமாறு சட்ட மா அதிபர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்,
2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த படு கொலைகள் தொடர்பில், அன்றிலிருந்து 5 வருடங்கள் உரிய விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை என சுட்டிக்கடடியுள்ள சட்ட மா அதிபர், 2017 ஆம் ஆண்டே சி.ஐ.டி. ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் 2018 ஆம் ஆண்டின் இறுதி காலப் பகுதியில் விசாரணைக் கோவை சட்ட மா அதிபருக்கு பாரப்படுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியே சட்ட மா அதிபர் பிரதம நீதியர்சரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM