யாழ். நகரை அண்டிய கன்னாதிட்டி வீதியில் அமைந்துள்ள கன்னாதிட்டி ஒழுங்கைகளினூடாக கனரக வாகனங்கள் செல்வதற்கு யாழ். மாநகர முதல்வரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள சில தனியார் வியாபார நிறுவனங்கள் தமது பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக கன்னாதிட்டி ஒழுங்கைகளைப் பயன்படுத்தி வந்ததனால் அந்தப் பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கியிருந்தனர். வீதிகளின் அளவை விடப் பெரிய வாகனங்களில் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதனால் வீதி இடியுண்டு போனதோடு, வீதியோரமிருந்த வாய்க்கால்களும் முற்றாக உடைந்து போயிருந்தன.
இதனால் பொது மக்களிடமிருந்து யாழ். மாநகர உறுப்பினருக்கூடாக யாழ். மாநகர முதல்வருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, குறிப்பிட்ட இரு ஒழுங்கைகளினூடாக கனரக வாகனங்கள் செல்வதைத் தடை செய்யும் வகையில் மாநகர முதல்வரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM