(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சஹரான் மட்டுமா அல்லது ஒரு பயங்கரவாத வலையமைப்பு உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, சஹரான் உருவாக்கிய அமைப்புகள் எதிர்காலத்தில் பலமடைந்து மீண்டும் தாக்குதல் நடத்த வாய்புகள் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அதேபோல் இன்று எமது பாதுகாப்பு அதிகாரிகள் மீது பல குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருதினால் சர்வதேச ஊடகங்கள் முன்னிலையில் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து அரசாங்கம் நடத்தும் விசாரணை ஆரோக்கியமானது அல்ல என கூறியுள்ளார். ஆகவே இவற்றை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறு சிறு குற்றங்களில் எல்லாம் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் இவ்வாறான பாரிய பிரச்சினை ஒன்றில் அரசாங்கம் இவ்வளவு மெதுவாக பயணிப்பது நல்லதல்ல.
இது பயங்கரவாதம். இதில் ஒரு மதம் அல்லது ஒரு இனத்தை இலக்கு வைத்து பேசுவதாக கூறப்படுகைனது. ஆனால் அவ்வாறு அல்ல, இது பயங்கரவாத செயற்பாடு. பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர் கதைகளை கூறுவதில் அர்த்தம் இல்லை. ஆகவே உடனடியாக இந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கொலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM