யோகா தினத்தில் சூப்பராக யோகா செய்து அசத்திய நாய்கள்

Published By: J.G.Stephan

21 Jun, 2019 | 04:18 PM
image

இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 'இதய ஆரோக்கியத்துக்காக யோகா' என்ற கருத்தை மையமாக கொண்டு யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியா, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். 

யோகா செய்வதன் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் பின்னர் அவர் உரையாற்றினார். மும்பையில் உள்ள இந்தியா கேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.

இதேபோல் சென்னை மெரினா கடற்கரையில் இந்திய கடற்படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் யோகாசனங்களை செய்து அசத்தினர்.

இதேபோல் ஜம்முவில் இன்று எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் யோகாசனத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பயிற்சி பெற்ற நாய்களும் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தியது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. 





முக்கிய செய்திகள்

icon-left
icon-right