(ஆர்.யசி , எம்.ஆர்.எம்.வசீம் )
பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் முன்வைக்கும் வாய்மூல வினாக்களுக்கு அமைச்சர்கள் உரிய முறையில் பதிலகிக்காவிடத்து அவர்களுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தான் உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபை அமர்வுகளின்போது 27/2 இன் கீழ் விசேட கூற்றை எழுப்பிய ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக தான் இதற்கு முன்னர் எழுப்பிய கேள்விகளுக்கு இன்னமும் பதில் வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்போது அனுரகுமார எம்.பி கூறியதானது,
சபாநாயகர் அவர்களே நீங்கள் இந்த சபைக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்குறீர்கள். கடந்த பாராளுமன்ற அமர்வின் போது சமுர்த்தி குறித்து கேள்வி எழுப்பினேன். இந்த வாரம் அதற்கான பதிலை கூறுவதாக தெரிவித்தீர்கள். இந்த வாரம் பதில் தரவில்லை. கொழும்பு கிழக்கு துரையடி குறித்து கேள்வி எழுப்பினேன். மூன்று வாரங்கள் கடந்தும் இன்றுவரை அதற்கான பதில் கிடைக்கவில்லை. அமைச்சர்கள் பாராளுமன்றத்திற்கு வருகின்றனர். ஆனால் பதில் தருவதில்லை. மக்கள் தொடர்புபட்ட கேள்விகளை கேட்டாலும் அவர்கள் பதில் தெரிவிப்பதில்லை.
சபை முதல்வர்:- உங்களின் பிரச்சினை எனக்கு விளங்குகின்றது. இந்த விடயங்களை நான் உரிய அமைச்சர்களுக்கு தெரிவித்துள்ளேன். தாய கமகே அமைச்சர் இரண்டு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கவேண்டியுள்ளது. நான் நாளாந்தம் நினைவு படுத்தினேன். இவர்கள் தான் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.
அனுரகுமார:- நான் எனது பிரச்சினையை கூறினால். சபை முதல்வர் அவரரது பிரச்சினையை என்னிடம் கூறுகின்றார்.
சபை முதல்வர்:- உங்களால் அவர்களுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும். அவர்கள் சபையை தவறாக வழிநடத்த முயற்சித்தால் சபாநாயகர் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும், நீங்கள் அதனை செய்ய முடியும்.
அனுரகுமார:- உங்களின் நெருக்கடியான நிலைமைகள் எனக்கு விளங்குகின்றது. வலியுறுத்தல் இருந்தும் அமைச்சர்கள் பொறுப்புடன் நடந்துகொள்லாமை பிரச்சினையான விடயம்.
சபை முதல்வர்:- அமைச்சர்கள் பாராளுமன்றத்திற்கு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் சபாநாயகர், பிரதி சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம்.
பிரதி சபாநாயகர் :- நான் உரிய நடவடிக்கை எடுக்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM