பிரதேச சபையை ஒரே இரவில் மாநகரசபையாக தரம் உயர்த்தி மாற்ற முடியுமென்றால் 35 வருடகாலமாக கோரி வருகின்ற பிரதேச செயலகத்தை ஏன் தரம் உயர்த்த முடியாது எனக் கேள்வி எழுப்பியிருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகவே கல்முனை உப பிரதேச செயலகத்தை உடனடியாக பிரதேச செயலகமாக தரம் உயர்த்த வேண்டுமென்று அக் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பருத்திதுறை வீதியின் கட்டப்பிராய் சந்தியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடத்திய அவசர ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனையிலுள்ள உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்துமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 35 வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்ற இக் கோரிக்கைள் முஸ்லிம் தலைமைகள் அல்லது முஸ்லீம் மக்களின் எதிர்ப்புக்களால் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
இவ்வாறு முஸ்லிம் தரப்புக்களின் அழுத்தம் காரணமாக அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொது பாரியளவிலான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்தும் அபகரித்தும் முஸ்லிம் குடியேற்றங்கள் அல்லது கிராமங்களை உருவாக்குவதற்காகவே முஸ்லிம் தரப்புக்கள் இதற்குத் தடையாக இருக்கின்றன.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலுமான 21 தமிழ்க் கிராமங்கள் முஸ்லிம் கிராமமாக மாறியிருக்கின்றது. இவ்வாறு கிராமங்களை மாற்றியும் காணிகளை ஆக்கிரமித்தும், மதத் தலங்களை அகற்றியும் முஸ்லிம் குடியேற்றங்களைச் செய்த பள்ளிவாசல்களைக் கட்டியிருப்பதாக முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான ஹிஸ்புல்லா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றார்.
இதனால் தமிழ் மக்கள் அதிகம் வாழக்கூடிய இந்தப் பிரதேசத்தில் உள்ள உப அலுவலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்த விடாமல் முஸ்லிம்கள் தடுக்கின்றனர். ஆனால் முஸ்லிம் மக்களுக்காக புதிய புதிய கிரமங்கள் பிரதேச செயலகங்கள் பிரதேச சபைகள் எல்லாம் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களுக்காக அவை எதனையும் செய்ய முடியாது என்று அவர்கள் தடுக்கின்றனர்.
இதனைச் சுட்டிக்காட்டி அல்லது கண்டித்தப் பேசினால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமிழ்த் தரப்புக்கள் சித்தரிக்கப்படுகின்றனர். ஆகவே முஸ்லிம் தலைமைகள் ஒரு இரவில் செய்ய முடியுமென்றால் 35 வருடமாக தமிழ் மக்கள் கோரி வருகின்றதை ஏன் செய்ய முடியாமல் இருக்கின்றது. அக இதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு காலம் வேண்டுமென பிரதமர் தெரிவித்ததாக கூட்டமைப்பினர் தற்போது கூறுகின்றனர்.
ஆகவே இதற்கு காலம் தேவையில்லை. அரசாங்கம் நினைத்தால் உடனடியாகச் செய்யலாம். எனவே உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை அல்லது குரல்களை கூட்டமைப்பினர் கொடுக்க வேண்டும். வெறுமனே பார்வையாளர்களாக இருப்பதை கூட்டமைப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் அரசாங்கம் காலதாமதம் இல்லாமல் தரம் உயர்த்தும்படி எமது கட்சி கேட்டுக்கொள்கிறது
ஆனால் நடைமுறையில் இருந்த ஒன்றை தரம்உயர்த்த கூட்டமைப்பு தலைமை காத்திரமான முடிவை எடுக்க தயங்குவதையும் முஸ்லிம் மக்கள் தங்களுக்கு எதிராக வருவார்கள் என்ற அச்சம் காரணமாக எதனையும் செய்யாமல் இருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே இதற்கான காத்திரமான நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொண்டு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM