(இராஜதுரை ஹஷான்)
சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சுயாதீனமான முறையில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இக்குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை அரசாங்க தரப்பில் சுயாதீன ஆணைக்குழுக்களே வெளிப்படுத்தியுள்ளது.
இவருக்கு எதிராக தற்போது போராட்டங்களை முன்னெடுக்கும் அமைப்புகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சிற்கு சொந்தமான வாகனங்களை சுகாதார அமைச்சர் தமது உறவினர்களுக்கும், சுய தேவைகளுக்காகவும் முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு 24 அரச வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளன. 03 நவீன சொகுசு மோட்டார் வாகனங்கள் காணாமலாக்கப்பட்டுள்ளது. இத்துடன் குறித்த 24 வாகனங்களும் எவரது பொறுப்பின் கீழ் காணப்படுகின்றது என்பதும் இதுவரையில் அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை.
சயிட்டம் பிரச்சினையினை தொடர்ந்து நெவில் பிரானாந்து தனியார் வைத்தியசாலையினை அரசுக்கு சொந்தமாக்குவதாக குறிப்பிட்ப்பட்டது. ஆனால் இதுவரையில் குறித்த வைத்தியசாலையினை அரசுடைமையாக்கவில்லை. மாறாக தனியார் வைத்திய சாலைக்கு சுகாதார அமைச்சின் ஊடாக ஐந்து பில்லயன் நிதி மாத தவணையாகவும், வருட தவணையாகவும் செலுத்தப்பட்டுள்ளமை தேசிய நிதி மோசடியாகவே கருதப்படும்.
அத்துடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தமக்கு நெருக்கமான மருந்துற்பத்தி நிறுவனங்களில் இருந்து தரமற்ற மருந்துகளை கொள்னவு செய்தமையின் காரணமாக புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பலடி நோய்தாக்கங்களுக்குள்ளாகிள்ளார்கள் இதனையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.
சுகாதார அமைச்சில் காணப்படும் நவீன இயந்திரங்களும் முறைகேடான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமையினால் வருடத்திற்கு மாத்திரம் 10 கோடி அரச நிதி வீண்விரயமாக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் தகுந்த ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆகவே முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சுகாதார அமைச்சர் சட்டத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM