தன்னிச்சையாக சிமாட் போல் பொருத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்

Published By: Daya

21 Jun, 2019 | 03:59 PM
image

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் சபை அனுமதி இன்றி தன்னிச்சையாக சிமாட் போல்  பொருத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பொது மக்களை அச்சமடைய வைக்கும், சிமாட் போலுடன் இணைக்கப்படும் கண்காணிப்பு கமெரா மற்றும் தொலைத்தொடர்பு அன்ரனா போன்றவை பொருத்தப்படுவதற்கான காரணம் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பம் சார் விடயங்கள் மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இன்று  காலை யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் வ.பார்த்தீபன், இ.ரஜீப் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தனர். 

இச் சந்திப்பிலேயே மேற்படி கோரிக்கையினையும் அவர்கள் விடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சபை அனுமதி இல்லாமல் 18 சிமாட் போல் பொருத்தும்  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

குறித்த சிமாட் போல் பொருத்துவது தொடர்பில் மாநகர சபையுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் எதிர்காலத்தில் குறித்த சிமாட் போல்  சிறிய ரக தெலைத்தொடர்பு அன்ரன பொருத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் கண்காணிப்பு கெமராக்களும் பொருத்தப்படவுள்ளன.

 

இது தொடர்பில் தொழில்நுட்ப அறிக்கை மற்றும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் தகவல்களை தருமாறு சபை முதல்வரிடம் கோரியிருந்தோம். மேலும் இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட பொது கூட்டம் கூட்டவும் சட்ட ரீதியாக கோரிக்கை விடுத்திருந்தோம். 

ஆனால் இதுவரையில் முதல்வரிடமிருந்த எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் சிமாட் போல் பொருத்தும் வேலைத்திட்டம் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றது. 

எந்த அபிவிருத்திக்கும் நாங்கள் தடையில்லை, கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தும் நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம். மாநகரத்தின் பாதுபாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அந்த கெமராக்கள் பொருத்தப்பட வேண்டும். 

ஆனால் தற்போது சபை அனுமதி இல்லாமல் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொருத்தப்படும் சிமாட் போலில் இணைக்கப்படும் கெமராக்கள் மக்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதிப்பவையாக அமையும். 

எனவே சிமாட் போல் தொடர்பில் உரிய முறையில் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47