திருகோணமலை மாவட்டத்தில் 2019 ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 58 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஏ. ஜே. எம். சிப்லி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு ஒழுங்கமைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை திருகோண மலையிலுள்ள கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனையின் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் காச நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் கிண்ணியா தள வைத்தியசாலை, மூதூர் தள வைத்தியசாலை மற்றும் கந்தளாய் தள வைத்தியசாலைகளில் சளி சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்.
செல்வநாயகபுரம், தோப்பூர், கோமரங்கடவல போன்ற பகுதிகளில் சளி சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை இரண்டு கிழமைகளுக்கு மேல் இருமல் மாலை நேரங்களில் காய்ச்சல், பசியின்மை, நிறை குறைவு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று சளி பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
அத்துடன் 2018 ஆம் ஆண்டு 136 காசநோய் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலமும் 58 நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஏ. ஜே. எம். சிப்லி மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM