( ஆ. பிரபுராவ் )
ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளிலுள்ள நாட்டுப் படகுகளை மீன் பிடித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் மே மாதம் 29 திகதி வரையில் மீன் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகுகள் மீன்பிடிக்க அரசு தடைவிதித்து வருகிறது.
இக்காலங்களில் நாட்டுப்படகுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதேபோல இன்று ராமேஸ்வரம் துறைமுகம், சங்குமால் கடற்கரை, முகுந்தராயர்சத்திரம், தனுஷ்கோடி, தங்கச்சிடம் குந்துகால், பாறையடி, சேராங்கோட்டை மற்றும் பாம்பன் உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீன்துறை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கொண்ட குழுவினர் படகுகளின் இயந்திர திறன், பாதுகாப்பு, நீளம் அகலம் மற்றும் படகுகளின் தன்மை படகுளின் ஆவணங்கள் மானிய டீசல் அட்டைகள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்பிடி வலைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
படகுளின் ஆவணங்கள் மற்றும் மானிய டீசல் முறைகேடாக பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் ஆய்வில் கண்டறியப்பட்டால் படகு உரிமையாhள்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு சட்ட ரீதியான நடவடிக்கையும் தொடரும் எனவும் அதிகாரிகளின் சோதனைக்கு படகு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் மீன்பிடித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM