தமிழகத்திலுள்ள அரசாங்க பாடசாலைகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
“ அரசாங்க பாடசாலைகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை ஏதுமில்லை. மதம், இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ளவேண்டும். தமிழகத்தில் அரசாங்க பாடசாலைகளில் வாரத்தில் ஒரு நாள் ஒரு வகுப்பறையில் யோகா பயிற்சி வழங்குவதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். அதற்கான நிதிகள் ஒதுக்குவதற்கும், பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கவனசிதறலின்றி கல்வி கற்க மாணவர்களுக்கு யோகா உதவுகிறது. யோகா கற்றுத் தர 13,000 பயிற்சியாளர்கள் தயாராகவுள்ளனர். அவர்களுக்கு உணவு, போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும். அதனை எப்படி செயற்படுத்துவது? என்பதை அரசு ஆராய்ந்து வருகிறது.” என்றார்.
முன்னதாக சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மாநில பா.ஜ.க.தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM