மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் அறையிலிருந்து 4 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலையின் 3ஆம் இலக்க வைத்தியசாலை அறையிலிருந்து ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் இரண்டும்,சாதாரண கையடக்கத் தொலைபேசிகள் இரண்டும் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புலனாய்வுப் பிரிவினர் அந்த அறையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்தத் கைத்தொலைபேசிகள்,கழிப்பறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட தொலைபேசிகளிலுள்ள சிம் அட்டைகள் மேலதிக பரிசோதனைக்காக குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
துமிந்த சில்வா புதிய ரக கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தும் முறையை வெளிப்படுத்தும் வகையில் புடைப்படம் ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தமை குறிப் பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM