இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்துவதற்காக புதுடில்லி செல்வதற்கு முன்னர் இனப் பிரச்சினைக்கான தீர்வு தாமதமாவது குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தக் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது.
நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறும் பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த இரண்டு நாட் கள் விசேட விவாதத்துக்கான கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்து, அதற்கான திகதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ளவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இனப்பிரச்சினைக்கு இணக்கமான சுமுகத் தீர்வு எட்டுவதற்கு புலிகளே முட்டுக்கட்டை என்று தென்னிலங்கையால் முன்னர் திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வந்தது.
இராணுவ ரீதியில் விடுதலைப்புலிகள் முறியடிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், இன்னமும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீதி, நியாய மான தீர்வு காணப்படவே இல்லை. காணப்படும் என்ற நம்பிக்கையும் அருகி வருகின்றது. தீர்வுக்கான இணக்கமும், வாய்ப்பும் இந்தப் பாராளுமன்றத்திலேயே உருவான பின்னரும், அது நடைமுறைக்கு வராமல் போனமைக்குக் காரணம் யாது? – என்ற கேள்வியின் அடிப்படையில் இத்தகைய விசேட விவாதம் ஒன்றுக்குக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுக்க வேண்டும் எனக் கூட்ட மைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
முதலில் பாராளுமன்றத்தில் இது குறித்த விசேட விவாதத்தில் தமிழர் தரப்பின் ஆதங்கங்கள், நீதியான எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பகிரங்கப்படுத்துவது என்றும், பின்னர் அடுத்த கட்டமாக, இந்தியப் பிரத மர் நரேந்திர மோடி உட்பட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை நேரில், தமிழருக்கு நீதியான தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கின்றமை குறித்து தெளிவுபடுத்தி சர்வதேசத்தின் கவனத்தை ஆழமாகத் திருப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.துரைரெட்ணசிங்கம், க.கோடீஸ்வரன் தவிர்ந்த ஏனைய அனைத்து எம்.பி.க்களும் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்படுகின்றமை கவலையளிக் கும் விடயமாகவுள்ளது. இந்த விடயத்தில் நாம் தொடர்ந்தும் அக்கறை செலுத்த வேண் டும். ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடை பெறவிருப்பதனால் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM