“காணாமல் போனோர் அலுவலகத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை ICRC கைவிடவேண்டும்”

Published By: Digital Desk 4

20 Jun, 2019 | 11:30 PM
image

இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோரின் அலுவலகத்தையோ அவ்  அலுவலகத்தின் செயற்பாடுகளையோ காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுக்காளான நாம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளை எம்மத்தியில் சூட்சுமமாக திணிக்கும் முயற்சியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் செயற்பட்டுவருவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மரியாசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார் .

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள்   இன்றுடன்  837 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் இன்றையதினம் (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் அந்த ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது,

எமது உறவுகளுக்காக நீதிகோரி போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எம்மால் ஏற்றுக்கொள்ளாத  இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு துணைபோகும் செயற்பாடுகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஈடுபட்டுள்ள அதேவேளை,

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எமக்கு ஆதரவாக இருக்கவேண்டிய சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தற்போது அரசின் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தின் கொள்கைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மத்தியில் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

இரகசியமான முறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவுகள் சிலரை முல்லைத்தீவு மாவட்டத்தில் அழைத்து சந்திப்பினை நடத்தி வருகின்றனர். 

இந்த செயற்பாட்டால் கடந்த இரண்டு வருடங்களுக்கு  மேலாக எமது உறவுகளுக்காக நீதிகோரி வீதியில் போராடும் நாம் விரக்தி அடைந்துள்ளோம் . யுத்தம் முடிந்து 10 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் குறித்து எம்மத்தியில் வராத சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று அரசின் காணாமல் போனோரின் அலுவலகத்தின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எம்மத்தியில் வந்து காணாமல் போன உறவினர்களின் உறவுகளை பிரித்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளான நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04